மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 42 அடியாக உயர்ந்தது.
மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்கு நொடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் உயராமல் இருந்து வந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டது. இதனால் அன்று காலை 41.04 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 41.95 அடியாக உயர்ந்தது. மேலும், அணைக்கு நொடிக்கு 8,113 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீருக்கு நொடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 13.15 டி.எம்.சி.