கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
காக்கும் கடவுள் எனப் போற்றப்படும் பகவான் மகாவிஷ்ணு, கிருஷ்ணராக அவதரித்த நாளே கிருஷ்ண ஜெயந்தி திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. "எங்கெல்லாம் அதர்மம் நிலவுகிறதோ அங்கெல்லாம் தோன்றி தர்மத்தை நிலை நாட்டுவேன்" என்று அருளிய ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த இந்த நாளில், உலகெங்கும் அறம் தழைத்து, அன்பும், அமைதியும், இனிமையும் பெருக வேண்டுமென்று வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.