திருவள்ளூர் மாவட்டம் வள்ளூர் அனல்மின் நிலையத்தில் 500 மெகா வாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.
அங்குள்ள 2ஆவது அலகில் கடந்த 10ஆம் ஏற்பட்ட கொதிகலன் குழாய் பழுது காரணமாக 500 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பழுது சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து 500 மெகா வாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.