ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் கிண்டி கிளையைச் சேர்ந்த ஆஸ்ரம் பள்ளிக்குப் பூட்டு போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
5 ஆண்டுகளாக ரூ. 10 கோடி வாடகைப் பணம் பாக்கி வைத்துள்ளதால் கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்த ஆஸ்ரம் பள்ளி கட்டட உரிமையாளர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கிண்டி பள்ளியில் படித்த மாணவர்கள் வேளச்சேரி பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இதுகுறித்து லதா ரஜினிகாந்த் தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.