சென்னை: அம்மா அதிமுக அணியின் பொதுச் செயலர் சசிகலாவின் கணவர் நடராஜன், பாஸ்கரன் ஆகியோர் மீதான வழக்கில், அமலாக்கத் துறையின் செயல்பாடுகள் மீது நீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
நடராஜன், பாஸ்கரன் ஆகியோர் வெளிநாட்டு கார் வாங்கியதில் மோசடி செய்ததாக அமலாக்கத் துறையினால் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்குத் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிப்பதில் அமலாக்கத் துறை மிகவும் மெத்தனமாக செயல்படுவதாக நீதிபதி குற்றம்சாட்டினார்.
மேலும், வழக்கு விசாரணயை ஆகஸ்ட் 29ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.