மர்மக் காய்ச்சல்: பள்ளி சிறுமி சாவு

சேலத்தில் மர்மக் காய்ச்சல் காரணமாக பள்ளி மாணவி உயிரிழந்தார்.

சேலத்தில் மர்மக் காய்ச்சல் காரணமாக பள்ளி மாணவி உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், காக்காபாளையம் அருகே உள்ள மலைபிரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி - மல்லிகா தம்பதியரின் மகள் ஜீவிதா (11). ஆட்டையாம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு பயின்று வந்த சிறுமி ஜீவிதாவுக்கு, கடந்த 7-ஆம் தேதி முதல் கடுமையான காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதையடுத்து, சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார்.
சிறுமி ஜீவிதா நன்றாக தேறி வந்த நிலையில் திடீரென காய்ச்சல் அதிகரித்ததாகவும், பின்னர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மருத்துவர்கள் உடனடியாக வராததாலும், நீண்ட நேரத்துக்கு பிறகு வந்த பயிற்சி மருத்துவர், சிறுமிக்கு ஊசியில் மருந்து செலுத்திய சிறிது நேரத்திலேயே ஜீவிதா உயிர் இழந்ததாகவும் கூறி அவரது உறவினர்கள், அந்தப் பகுதி பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com