இரு அணிகளும் இணைந்தால் அதிமுகவுக்கு நல்லது என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. நினைவு இல்லம் விவகாரத்தில் ஜெயலலிதா உறவினர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்றார். மேலும் இரு அணிகளும் இணைந்தால் அதிமுகவுக்கு நல்லது எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 44 ஆண்டுகளாக வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.
இதையடுத்து அதிமுக அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.