முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. இரு அணிகள் இணைப்பு முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடனான அமைச்சர்கள் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் சென்னையில் உள்ள போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.