விராலிமலை அருகே மனைவியை கொன்ற கணவன் கைது

விராலிமலை அருகே வியாழக்கிழமை மனைவியை கொன்ற கணவனை விராலிமலை போலிஸார் இன்று கைது செய்தனர்.
விராலிமலை அருகே மனைவியை கொன்ற கணவன் கைது

விராலிமலை அருகே வியாழக்கிழமை மனைவியை கொன்ற கணவனை விராலிமலை போலிஸார் இன்று கைது செய்தனர்.

விராலிமலை அருகேயுள்ள சின்னு மகன் செல்வம்(30) தனியார் வாகன ஒட்டுநரான இவருக்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவி கோகிலா(32), இரண்டாவது மனைவி நாகலட்சுமி(26) இதில் முதல் மனைவிக்கு 1 ஆண் பிள்ளையும், 2 வது மனைவிக்கு 2 பிள்ளைகளும் உள்ளனர்.

இந்நிலையில், முதல் மனைவி கோகிலாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு இருவருக்கு அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுமாம், இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த செல்வம் கோகிலாவின் கழுத்தை நெறித்ததில் நிகழ்விடத்திலேயே மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த விராலிலை போலிஸார் கொலை செய்து தப்பியோட முயன்ற செல்வத்தை வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com