முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு காலதாமதானது என்றார் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
அதிமுகவில் உள்ள இரண்டு அணிகளும் இணைந்தால் அவர்களுக்குதான் நல்லது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்துள்ள நிலையில் அவரது உறவினர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும்.
மேலும், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு காலதாமதமானது. எனினும், இது வரவேற்கத்தக்கதுதான் என்றார் அவர்.