தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தகவலில், 
வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

சென்னையைப் பொறுத்தவரை பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் செங்குன்றத்தில் அதிகபட்சமாக 13 செ.மீ., மழையும் வால்பாறையில் 11 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com