திருச்சி மாநகராட்சி இணையதளம் முடக்கப்படவில்லை: மாநகர ஆணையர் தகவல்

பாகிஸ்தானைச் சேர்ந்த இணைய முடக்கர்களால் திருச்சி மாநகராட்சி இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான அடுத்த அரை நேரத்தில்

திருச்சி : பாகிஸ்தானைச் சேர்ந்த இணைய முடக்கர்களால் திருச்சி மாநகராட்சி இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான அடுத்த அரை நேரத்தில் இமையதளம் முடக்கப்படவில்லை என திருச்சி மாநகர ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர்,பாகிஸ்தான் குறித்த தகவல்களை பதிவிட்ட இணையதள முடக்கர்கள், முக்கிய தரவுகளை திருடியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அரை மணி நேரத்தில் திருச்சி மாநகராட்சி இணையதளம் சரி செய்யப்பட்டதாகவும், இது குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், திருச்சி மாநகராட்சி இணையதளம் முடக்கப்படவில்லை என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com