பத்திரப் பதிவுத் தலைவராக (ஐ.ஜி.,) குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் பதவி பி.சங்கரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்) பி.சங்கர் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை இணைச் செயலாளர் (நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர்) ஜெ.குமரகுருபரன் பத்திரப்பதிவுத் துறை தலைவர் (செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை இணைச் செயலாளர், அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்) அனு ஜார்ஜ் சர்க்கரைத் துறை இயக்குநர் (பொதுத்துறை கூடுதல் செயலாளர்-மரபு) சி.சமயமூர்த்தி பொதுத்துறை கூடுதல் செயலாளர்-மரபுகள் (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை முன்னாள் இயக்குநர்) தமிழ்நாடு கனிமவளங்கள் துறை நிர்வாக இயக்குநராக உள்ள ஆர்.வெங்கடேசன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் செயலாளர் பொறுப்பை கூடுதலாகக் கவனித்து வந்தார். இந்த கூடுதல் பொறுப்புக்குப் பதிலாக அவர் முழு நேரச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.