தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பேச்சைப் பொருட்படுத்த வேண்டாம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பேச்சைப் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பேச்சைப் பொருட்படுத்த வேண்டாம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பேச்சைப் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக ஊழலுக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாகவும், எதிரகாகவும் அரசியல் கட்சி தலைவர்கள் பேசி வருகின்றனர். இதில், கமலின் அறிக்கைக்கு பெரும்பாலும் ஆதரவு தெரிவித்தே அறிக்கை விடுத்து வருகிறார் ஸ்டாலின்.

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பேச்சைப் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.

நாளை அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடக்குமா என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

அவர் மேலும் கூறுகையில், நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து சிறப்பாக நடிக்கும் ஸ்டாலினுக்கு சிறந்த நடிகர் விருது அளிக்கலாம் என்றவர் கமல்ஹாசன் இயக்கத்தில் ஸ்டாலின் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தெரிவித்தார்.

அதிமுக இரு அணிகளான ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இணைப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், எது நடக்க இருக்கிறதோ அது நாளை நன்றாக நடக்கும் என்று கூறினார்.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் தான் எஜமானர்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com