மீண்டும் குடும்ப ஆட்சி வந்துவிடக் கூடாது: நிதி அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தை சூறையாடிய "சூரிய' குடும்பத்தின் ஆட்சி மீண்டும் வந்துவிடக் கூடாது என தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
மீண்டும் குடும்ப ஆட்சி வந்துவிடக் கூடாது: நிதி அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தை சூறையாடிய "சூரிய' குடும்பத்தின் ஆட்சி மீண்டும் வந்துவிடக் கூடாது என தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில், செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி கோயில் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:
நமது நண்பர்களுடன் நடக்கும் தர்மயுத்தம் விரைவில் முடிவுக்கு வரும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசு தொடர்ந்து மக்கள் சேவை செய்வது உறுதி. துரோகிகள் தூக்கி எறியப்படுவார்கள். 1.50 கோடி தொண்டர்கள் உள்ள அதிமுக ஆட்சியை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. தமிழகத்தை சூறையாடியது சூரிய குடும்பம். அதுபோல் மீண்டும் ஒரு குடும்ப ஆட்சி உருவாகக் கூடாது என்றார்.
இதைத்தொடர்ந்து, அமைச்சர்கள் செங்கோட்டை
யன், திண்டுக்கல் சீனிவாசன், பா.பெஞ்சமின் ஆகியோர் பேசினர். இதில், எம்எல்ஏக்கள் சிறுணியம் பலராமன், அலெக்ஸாண்டர், தண்ணீர்குளம் ஏழுமலை, பி.எம்.நரசிம்மன், கே.எஸ்.விஜயகுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com