ரஜினிகாந்த் கோட்டையில் முதல்வராக அமரும் நாள் வரும்: தமிழருவி மணியன் பேச்சு

ரஜினிகாந்த் தேர்தலில் வெற்றிபெற்று கோட்டையில் முதல்வராக அமரும் நாள் வரும் என்று காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன்
ரஜினிகாந்த் கோட்டையில் முதல்வராக அமரும் நாள் வரும்: தமிழருவி மணியன் பேச்சு


திருச்சி: ரஜினிகாந்த் தேர்தலில் வெற்றிபெற்று கோட்டையில் முதல்வராக அமரும் நாள் வரும் என்று காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கூறினார்.

திருச்சியில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் ரஜினியின் அரசியல் பிரவேசம் அவசியமா? என்ற தலைப்பில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதற்கு ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள் திரண்டு வந்துள்ளதால் திருச்சி மாநகரமே விழாக்கோலமாக காட்சி அளித்து வருகிறது.

காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கணேசன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், இயக்கத்தின் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் பங்கேற்று பேசியதாவது:

இரண்டு திராவிட கட்சிகளையும் அகற்ற வேண்டும் என்பது எனது சபதம். ரஜினியை தவறவிட்டால் தமிழகம் வாழ்வதற்கும் எழுவதற்கும் வழியில்லை. தமிழகத்தில் "சிஸ்டம்" கெட்டுவிட்டது என திருக்குறள் போல் சொன்னவர் ரஜினி. துாய்மையான ஆட்சியை தர புறப்பட்டுவிட்டார் ரஜினி. தன் பின்னால் இருப்பவர்கள் ஊழலின் நிழல் படாதவர்களாக இருக்க வேண்டும் என ரஜினி விரும்புகிறார் என்று கூறினார்.

ரஜினியின் பெருந்தன்மை என்னை நெகிழ வைத்தது. நான் ரஜினியை சந்தித்தபோது, நீங்கள் 20 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக சொல்கிறார்களே, நீங்கள் வருவீர்களா என நான் கேட்டதற்கு, நான் அரசியலுக்கு வருவது குறித்து முடிவு எடுத்து விட்டேன். அரசியலுக்கு வருவது என்பது எனக்கு ஆண்டவன் இட்ட கட்டளை என்பதால் நான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் கூறினார்.

10 ஆண்டுகளில் நதிகள் இணைப்பை செய்து முடிக்க முடியும் என்று ரஜினி கூறினார். தமிழகத்தின் பிரச்னைகளுக்கு தீர்வு காண ரஜினிகாந்த் தவித்து வருகிறார்.

நதிகள் இணைப்பு, ஊழலற்ற நிர்வாகம், வெளிப்படைத்தன்மை என ரஜினியின் கனவுத்திட்டம் என்னை கவர்ந்து விட்டது. அதனால் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். அவர் அரசியல்களத்தில் அடி எடுத்து வைக்க போகிறார் என்றதும் விமர்சனங்கள் எழுகிறது. ரஜினி தமிழரா என்று கேட்கின்றனர்.

கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஊழலால் இரு திராவிட கட்சிகளும் சீரழித்துவிட்டன. ரஜினி தேர்தலில் வெற்றிபெற்று கோட்டையில் முதல்வராக அமரும் நாள் வரும் என்று கூறினார்.  

மாநாடு நடைபெறும் உழவர் சந்தை மைதானம் முழுவதும் காந்தி, காமராஜர் ஆகியோரது படங்களுடன் ரஜினிகாந்த், தமிழருவி மணியன் படங்களே தட்டிகளாக வைக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com