விரைவில் நல்ல அறிவிப்பு வரும்: அபத்தமான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியாது- ஓ. பன்னீர்செல்வம்

அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை முடிவுடைந்து விரைவில் நல்ல செய்தி வெளியிடப்படும் என முன்னாள் முதல்வர்
விரைவில் நல்ல அறிவிப்பு வரும்: அபத்தமான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியாது- ஓ. பன்னீர்செல்வம்

சென்னை: அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை முடிவுடைந்து விரைவில் நல்ல செய்தி வெளியிடப்படும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூடிய விரைவில் அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை நிறைவு பெற்று நல்ல செய்தி வரும் என்று கூறினார்.

மேலும், அணிகள் இணைவது தொடர்பாக பேரம் நடைபெற்று வருவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அபத்தமான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியாது என்றும் எந்தவொரு குடும்பத்தியின் பிடியிலும் கட்சி சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதே எங்களின் நோக்கம் என்று பன்னீர்செல்வம் கூறினார்.

இன்று காலை சங்கரன்கோவிலில் ஒ.பன்னீர்செல்வத்திடம் ரஜினியின் அரசியல் வருகைக்கு அடித்தளம் அமைப்பதற்காக காந்திய மக்கள் இயக்கம் திருச்சியில் மாபெரும் மாநாடு நடத்த இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி மிகச் சிறந்த நடிகர். அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com