சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரமாக இன்று சென்னை வந்தார்.
அதிமுகவில் பிரிந்துள்ள இரு அணிகளும் இணைப்பிற்கு பின் அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் எனவும், துணை முதல்வராக ஓ. பன்னீர் செல்வம் இன்று பதவியேற்பார் என்றும் கூறப்பட்டது. அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் ஆளுநரின் சென்னை வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இணைப்பு இன்று நண்பகல் 12 மணிக்கே அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது. இரு தரப்பினரும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவதாகவும் கூறப்பட்டது.
ஆனால், சசிகலா நீக்கம் குறித்து உறுதியான எழுத்துப்பூர்மான முடிவை எடப்பாடி பழனிசாமி அணி அறிவிக்க வேண்டும் எனவும் அதற்குப் பின்னர்தான் தலைமை அலுவலகத்திற்கு வருவோம் என ஓபிஎஸ் அணியினர் கூறியுள்ளனர்.
அணிகள் இணைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை அடுத்து முதல்வர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலம் செல்லும் திட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், மும்பையில் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு புறப்பட்ட ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரமாகச் சென்னை வந்துள்ளார்.