துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

துணை முதல்வராக பதவியேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். 
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அதிமுக-வின் இரு அணிகளும் இன்று இணைந்தன. இதையடுத்து தமிழக அமைச்சரவைப் பட்டியல் மாற்றியமைக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சராகப் பதவியேற்றார்.

மேலும், பாண்டியராஜன் உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசகர் ராவ் முன்னிலையில் இவர்கள் பதவியேற்றனர்.

பின்னர் தலைமைச் செயலகம் சென்ற ஓ.பன்னீர்செல்வம் தனது இருக்கையில் அமர்ந்து பணிகளைத் துவங்கினார். 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோருக்கு ட்விட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதில் அவர் கூறியதாவது:

தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்ற திரு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகம் இனி மாபெரும் வளர்ச்சியடையும் என்று நான் மிகவும் நம்புகிறேன். தமிழகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து கொடுக்கும்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com