அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதே அரசின் கடமை

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதே அரசின் கடமை

அரசு ஊழியர்களை போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளாமல், அவர்களுடன் பேச்சு நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதே அரசின் கடமை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அரசு ஊழியர்களை போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளாமல், அவர்களுடன் பேச்சு நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதே அரசின் கடமை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதைக் கண்டுகொள்ளாமல் காவல்துறை மூலம் அவர்களை அடக்கி விடலாம் என தமிழக அரசு நினைப்பது கண்டனத்துக்குரியது.
கடந்த 16-ஆம் தேதி பிரசார இயக்கம் நடத்தி அரசின் கவனத்துக்கு தங்களின் கோரிக்கைகளை அவர்கள் எடுத்துச் சென்றபோதும், அதற்குத் தீர்வு காண எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை. மாறாக, அதிமுக-வின் இரு அணிகள் இணைப்பில் மட்டுமே தமிழக முதல்வர் கவனம் செலுத்தி வருகிறார். இதன் காரணமாக வரும் 22-ஆம் தேதி மாநில அளவிலான வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவேண்டிய சூழலுக்கு அரசு ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதன் பிறகு, செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கப் போவதாகவும் அவர்கள் அறிவித்திருக்கின்றனர்.
எனவே, அரசு ஊழியர்களை, போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளாமல், அவர்களுடன் பேச்சு நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதே பொறுப்புள்ள அரசின் கடமை. ஆனால், அதிமுக அரசிடமிருந்து அதை எதிர்பாக்க முடியாது. எனவே, அரசு ஊழியர்களுடன் இணைந்து இந்த அரசை ஜனநாயக ரீதியில் வீழ்த்தி தமிழக மக்களைக் காப்பாற்றும் பணியில் திமுக தீவிர கவனம் செலுத்தும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com