உண்ணாவிரதம் எதிரொலி: நளினியை சந்திக்க முருகனுக்குத் தடை

ஜீவசமாதி அடைய அனுமதிக்கக் கோரி வேலூர் மத்திய சிறையினுள் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் முருகன் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்.

ஜீவசமாதி அடைய அனுமதிக்கக் கோரி வேலூர் மத்திய சிறையினுள் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் முருகன் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். இதனால் அவரது மனைவியை மூன்று மாதங்கள் சந்திக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் மத்திய சிறையில் முருகன் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சிறையினுள் ஜீவசமாதி அடைய அனுமதிக்கக் கோரி கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 18) உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய முருகன் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமையும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.
இதையடுத்து 15 தினங்களுக்கு ஒரு முறை பெண்கள் சிறையில் உள்ள மனைவி நளினியை சந்திப்பதற்கு மட்டுமல்லாது, உறவினர்களையும் மூன்று மாதங்கள் சந்திக்க முருகனுக்கு சிறைத் துறை நிர்வாகம் தடை விதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com