டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள் விரைவில் இணைவார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ சூசகமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அனைவரும் ஒன்றிணைந்து அதிமுகவை வழி நடத்துவோம். அதிமுக 2 அணிகளும் இணைந்ததுபோல் பிரிந்து சென்றவர்களும் இணைவார்கள்.
பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முயற்சியில் முதல்வர் ஈடுபடுவார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைவரையும் அரவணைத்து செல்வார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.