அதிமுகவின் இரு அணிகளும் இணைவதால் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
மக்கள் மேடை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவைக்கு திங்கள்கிழமை வந்த கனிமொழி, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைவதால் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை. அது அவர்களுக்கு மட்டுமே நல்லது. மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. எனவே, இந்த ஆட்சி தொடர வாய்ப்பு இல்லை. அதைப் போலவே, தற்போது ரஜினிகாந்தை முன்னிறுத்தும் தமிழருவி மணியன், ஏற்கெனவே பல பேரை முன்னிறுத்தியுள்ளார் என்றார்.