ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் துறைகள்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் துறைகள்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ஆளுநரின் முதன்மைச் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் இருந்த, திட்டம், சட்டப் பேரவை, தேர்தல்கள், கடவுச்சீட்டு ஆகிய துறைகள் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்திடம் அளிக்கப்படுகின்றன. மீன் வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் என்று டி.ஜெயக்குமார் அழைக்கப்படுவார்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் பரிந்துரையை ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஏற்று, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com