நீட் தேர்வில் ஓராண்டுக்காவது விலக்கு அளிக்க பரிசீலிக்க வேண்டும் என்று பாஜக எம்பி இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
நீட் தேர்வில் ஓராண்டுக்காவது விலக்கு அளிக்க பரிசீலிக்க வேண்டும். மாட்டுக்கு கொண்டுவந்த அவசரச்சட்டம் வேறு, நீட்டுக்கு கொண்டு வந்த அவசரச்சட்டம் வேறு.
முத்தலாக் தடை தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரே நேரத்தில் 3 முறை தலாக் சொல்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. முத்தலாக் தொடர்பான தீர்ப்பால் மகிழ்ச்சி அடைவது இஸ்லாமிய பெண்கள்தான்.
பழனிசாமி, ஓபிஎஸ் ஒற்றுமையால் பாஜகவுக்கு எந்த பலனும் இல்லை. அதிமுக ஆட்சி அடுத்த 4 ஆண்டுகள் தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.