எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக அரியலூர் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அரியலூர் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க பிற்பகல் வந்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கடந்த 6 மாதங்களாக தனி தனி அணியாக செயல்பட்டு வந்த இவர்கள், கடந்த திங்கள்கிழமை கருத்து வேறுபாடுகளை களைந்து ஓரணியாக இணைந்தனர். இணைப்புக்கு பிறகு நடைபெறும் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா என்பதால், அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் திரண்டு வந்து இருவரையும் உற்சாகமாக வரவேற்றனர்.