எவ்வித வசதிகளின்றி காட்டில் வசிக்கிறோம், இது தான் சொகுசு வாழ்க்கையா? என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுவையில் தனியார் விடுதியில் தங்கியுள்ள அவர் இன்று கூறியதாவது:
நான்கு நாட்கள் இங்கு தங்குவதற்காக வந்துள்ளோம். இதில் இரண்டு நாட்கள் முடிந்துள்ளது. எங்கள் அணிக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு அதிக அளவில் உள்ளது. இதனால் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை உயரும். இது பற்றி முழுமையாக தெரிவிக்க முடியாது.
வெளியில் சென்ற பிறகு ஆதரவு எம்.எல்.ஏக்களை அழைத்து பேசி முடிவு செய்வோம். எங்களது துணை பொதுசெயலாளர் அறிவுரைப்படி கருத்து பரிமாற்றம் செய்து வருகிறோம். இங்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறோம். நாங்கள் உல்லாசமாக தங்கியிருப்பதாக தவறான தகவல்களை பரப்புகின்றனர்.
ஆனால் உண்மையில் எவ்வித வசதிகளின்றி காட்டில் வசிக்கிறோம். இது தான் சொகுசு வாழ்க்கையா? தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. அங்கிருந்தால் மிரட்டப்படுவோம். பாதுகாப்பு கருதியே இங்கு தங்கியுள்ளோம். எங்களது சொந்த பணத்திலே இங்கு தங்கியுள்ளோம் என்றார் தங்கதுரை.