முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகள் தண்டனை பெற்றுவரும் ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளன் ஒருமாதம் பரோலில் வேலூர் சிறையிலிருந்து விடுதலையானர்.
பேரறிவாளனின் தந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரை காண்பதற்காக பேரறிவாளனுக்கு பரோல் அளிக்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேரறிவாளனை ஒரு மாதம் பரோலில் விடுவிக்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவானது வேலூர் சிறை கண்காணிப்பாளருக்கு இன்று இரவு கிடைத்தவுடனேயே சிறையிலிருந்து பரோலில் விடுவிக்கப்பட்டார்.
சிறையிலிருந்து ஜோலார்பேட்டையிலுள்ள அவரது வீட்டிற்கு இரவு சென்ற பேரறிவாளனுக்கு உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.