வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
file photo
file photo

வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 
தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளுக்கு இடையே மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்யக்கூடும்.  

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சி மருங்காபுரியில் 7 செ.மீ., மற்றும் கந்தர்வகோட்டையில் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com