நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறவே குட்கா விவகாரம்: முதல்வரை சாடும் ஸ்டாலின்! 

சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறவே குட்கா விவகாரத்தினை முதல்வர் பழனிசாமி கையில் எடுத்துள்ளார் என்று திமுகவின் செயல் தலைவரும், சட்டசபை எதிர்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின்... 
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறவே குட்கா விவகாரம்: முதல்வரை சாடும் ஸ்டாலின்! 

திருவாரூர்: சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறவே குட்கா விவகாரத்தினை முதல்வர் பழனிசாமி கையில் எடுத்துள்ளார் என்று திமுகவின் செயல் தலைவரும், சட்டசபை எதிர்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்ட விரோதமாக குட்கா விற்பனை நடைபெறுவது தொடர்பாக திமுகவினர் கையில் குட்கா பொட்டலங்களுடன் அவைக்கு வந்து குற்றம் சாட்டினார்கள். இது தொடர்பாக அப்பொழுது சட்டசபை உரிமைக் குழுவில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவாரூரில் நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.அப்பொழுது அவர் பேசியதாவது:

சட்டமன்றத்தில் குட்கா விவகாரம் பற்றி பேசுவதற்காக நாளை உரிமை குழு கூட இருக்கிறது. ஆனால் இந்த கூட்டத்திற்கு வர தனக்கு அழைப்பு இல்லை.

தற்பொழுது விரைவில் சட்டசபையில் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற குட்கா விவகாரத்தினை முதல்வர் பழனிசாமி கையில் எடுத்துள்ளார். 

மத்திய அரசிடம் அடிபணியும் அரசாகதான் தமிழக அரசு உள்ளது.

ஒரு மாதத்திற்குள் தமிழகத்தில் அரசியல் மாற்றம் வந்தே தீரும்.  அ.தி.மு.க. ஆட்சி தானாகவே கவிழ்ந்து விடும்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com