2011இல் இருந்து மின் துறையில் ஊழல் நடந்துள்ளது என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் எங்களுக்கு தார்மீக ஆதரவை தெரிவித்துள்ளனர். பொதுக்குழுவை கூட்ட பொதுச்செயலாளருக்குத்தான் அதிகாரம் உள்ளது. சென்னையில் செப்டம்பர் 12ல் அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட 5 அமைச்சர்களை மாற்ற வேண்டும். 5 பேரை மாற்றுவதன் மூலம் ஊழல் இல்லா ஆட்சியை அமைக்க முடியும். 2011இல் இருந்து மின் துறையில் ஊழல் நடந்துள்ளது. தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியே தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.