தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பொறுப்புடன்தான் செயல்படுகிறார் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
குழம்பிய குட்டையில் மீன்பிடித்து அதை சாப்பிடப் பார்க்கிறது திமுக. ஆளுநர் மாளிகையையும், நீதிமன்றத்தையும் அரசியலுக்காக திமுக பயன்படுத்துகிறது. தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பொறுப்புடன்தான் செயல்படுகிறார்.
சினிமா கோட்டையில் வாய்ப்பில்லாதவர்கள், ஜார்ஜ் கோட்டையை பிடிக்கலாம் என மனக்கோட்டை கட்டுகிறார்கள். ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் ஊழலற்ற ஆட்சியை தர வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.