கன்னியாகுமரியில் போராட்டம் தீவிரம்: மீனவ குடும்பத்தினர் பேரணியால் போக்குவரத்து முடக்கம்

கன்னியாகுமரியின் சின்னத்துறை பகுதியில் கடலில் மாயமான மீனவர்களை பத்திரமாக மீட்க வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மீனவ குடும்பத்தினர் பேரணியாகச் சென்றனர்.
கன்னியாகுமரியில் போராட்டம் தீவிரம்: மீனவ குடும்பத்தினர் பேரணியால் போக்குவரத்து முடக்கம்


கன்னியாகுமரி: கன்னியாகுமரியின் சின்னத்துறை பகுதியில் கடலில் மாயமான மீனவர்களை பத்திரமாக மீட்க வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மீனவ குடும்பத்தினர் பேரணியாகச் சென்றனர்.

ரயில் மறியலில் ஈடுபட திட்டமிட்டிருக்கும் மீனவ குடும்பத்தினர் ஆயிரக்கணக்கானோர் குழித்துறை நோக்கி பேரணியாக வந்து கொண்டிருப்பதால் பல பகுதிகளில் போக்குவரத்து முடக்கப்பட்டது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னமும் மீட்கப்படாத நிலையில், வெறும் 86 மீனவர்கள் மட்டுமே மீட்கப்படவில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுவது உண்மைக்கு மாறானது என்றும் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடலில் தத்தளித்து வரும் மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

குழித்துறையில் ரயில் மறியலில் ஈடுபடுவதற்காக, சுமார் 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் என ஆயிரக்கணக்கானோர் இரு பிரிவாக பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரியின் தலச்சன்விளை பகுதியில் இருந்து ஒரு பிரிவினரும், இஞ்சிவிளை பகுதியில் இருந்து மற்றொரு பிரிவினரும் பேரணியாக சென்று கொண்டிருக்கின்றனர்.

இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீட்கப்படவில்லை என்று கூறி மீனவ கிராமத்தினர் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். காணாமல் போன மீனவர்கள் அனைவரையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com