காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி குழித்துறையில் 5 ஆயிரம் மீனவ மக்கள் பேரணி மேற்கொண்டுள்ளனர்.
ஒக்கி புயலால் மாயமான 1,500 க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்டுத் தரக்கோரி கன்னியாகுமரியில் ரயில் மறியல் செய்ய போவதாக மீன கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அறிவித்திருந்தனர்.
அதன்படி காணாமல் போன மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குழித்துறையில் 5 ஆயிரம் மீனவ மக்கள் இன்று இரண்டு பிரிவுகளாக பேரணியாக புறப்பட்டு செல்கின்றனர்.
தொடர்ந்து அவர்கள் அறிவித்தபடி ரயில் மறியலிலும் ஈடுபட உள்ளனர்.