என் மனுவையே மாற்றியுள்ளனர்: தீபா

தேர்தல் ஆணையத்தில் நான் கொடுத்த மனுவையே மாற்றிவிட்டு, எனது பெயரில் வேறு மனுவை வைத்துள்ளனர் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குற்றம்சாட்டினார்.
என் மனுவையே மாற்றியுள்ளனர்: தீபா

தேர்தல் ஆணையத்தில் நான் கொடுத்த மனுவையே மாற்றிவிட்டு, எனது பெயரில் வேறு மனுவை வைத்துள்ளனர் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குற்றம்சாட்டினார்.
சென்னை தலைமைச் செயலகத்துக்கு வியாழக்கிழமை மாலை ஜெ.தீபா வந்தார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியைச் சந்தித்து, தன்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து புகார் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:-
வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியிடம் கேட்டபோது, பல்வேறு இடங்களைப் பூர்த்தி செய்யவில்லை என்று கூறினார். 
மனுவை வலியுறுத்தி கேட்டுப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அந்த மனு நான் அளித்த மனுவாகவே இல்லை. நான் அளித்த மனுவில் சில திருத்தங்களைச் செய்திருந்தேன். அவர் காட்டிய மனு தெளிவாக இருந்தது. மேலும் 2 வெற்று காகிதங்கள் இருந்தன. அதை நான் அளிக்கவில்லை. 
இது தொடர்பாக முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் புகார் தெரிவித்துள்ளேன். விசாரணை நடத்துவதாக அவரும் கூறியுள்ளார். நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வளவு முறைகேடுகளுடன் ஒரு தேர்தலை நடத்த வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com