உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்தக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு நீதிபதிகள் வேணுகோபால், தாரணி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இருப்பதால் நீதிபதிகள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.