ஜெயலலிதாவுக்கு அளவுக்கு அதிகமான ஸ்டீராய்டு: மருத்துவர் சங்கர் பகீர் தகவல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளவுக்கு அதிகமான ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட்டதாலேயே உடல் நலன் பாதிக்கப்பட்டதாக மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு அளவுக்கு அதிகமான ஸ்டீராய்டு: மருத்துவர் சங்கர் பகீர் தகவல்


சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளவுக்கு அதிகமான ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட்டதாலேயே உடல் நலன் பாதிக்கப்பட்டதாக மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தின் முன்பு, மருத்துவர் சங்கர் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

ஜெயலலிதாவுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் என்ற அடிப்படையில் சங்கரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் சங்கர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அளவுக்கு அதிகமான ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொண்டுள்ளார். அப்பல்லோவில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே, அவர் அதிகமான ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொண்டதால்தான் அவரது உடல்நலன் பாதிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com