சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செவ்வாய்க்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார்.
சளி, மூச்சுத்திணறல் காரணமாக தா.பாண்டியன் சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவரை, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செவ்வாய்க்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார்.