தமிழ்நாடு
குக்கர் பிரசாரம்: தடை கோரி அதிமுக மனு
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பிரஷர் குக்கரை கையில் எடுத்துச் சென்று பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டுமென தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் அதிமுக புகார் மனு அளித்துள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பிரஷர் குக்கரை கையில் எடுத்துச் சென்று பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டுமென தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் அதிமுக புகார் மனு அளித்துள்ளது.
அதிமுக சார்பில் அந்தக் கட்சியின் வழக்குரைஞரான பாபு முருகவேல் இந்த புகார் மனுவை ராஜேஷ் லக்கானியிடம் புதன்கிழமை அளித்தார். அதில், "ஆர்.கே.நகரில் பிரஷர் குக்கர் சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அவருக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் அவரது ஆதரவாளர்கள், உண்மையான குக்கரையே கையில் எடுத்து வருகிறார்கள். சின்னத்தின் படத்தைக் காண்பிப்பதற்குப் பதிலாக, உண்மையாகவே அதனை கையில் எடுத்து வருவதைத் தடை செய்ய வேண்டும்' தெரிவிக்கப்பட்டுள்ளது.