ஒக்கி புயல் பாதித்த கன்னியாகுமரிக்கு 19ம் தேதி வருகிறார் பிரதமர்

ஒக்கி புயல் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் 19ம் தேதி பிரதமர் மோடி வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒக்கி புயல் பாதித்த கன்னியாகுமரிக்கு 19ம் தேதி வருகிறார் பிரதமர்


சென்னை: ஒக்கி புயல் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் 19ம் தேதி பிரதமர் மோடி வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே சமயம், ஒக்கி புயல் பாதித்த கன்னியாகுமரி மற்றும் கேரள மாவட்டங்களுக்கு பிரதமர் மோடி வருகை தர இருப்பதாகவும், பிரதமர் மோடியின் வருகை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பயணத் திட்டம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல், கன்னியாகுமரிக்கு வந்து, ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, மீனவ மக்களுக்கு ஆறுதல் கூறியிருந்த நிலையில், பிரதமர் மோடி அடுத்த வாரம் கன்னியாகுமரி வர திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com