சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிடக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் மேலும் கூறியதாவது,
சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கக் கூடாது. உருக்காலை மீண்டும் லாபத்தில் செயல்படும் வகையில் அதற்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும். 2016-17ஆம் நிதியாண்டில் ஆலையின் நிதிநிலை மேம்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தனியார் மயமாக்கப்பட்டால் உருக்காலையை நம்பியுள்ள 2 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். பல துணை நிறுவனங்களும் இரும்பாலையை நம்பி உள்ளன. தரமான உருக்காலை என பெயர்பெற்ற சேலம் உருக்காலை தமிழகத்தின் சின்னம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.