பாம்பன் கடல் பகுதியில் சீற்றம் ஏற்பட்டு, 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால், ரயில் பாலத்தில் கடல் அலைகள் ஆக்ரோஷமாக மோதின.
ராமநாதபுரம் மாவட்டம், பாக்நீரிணைப் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால், வடக்குப் பகுதியில் உள்ள துறைமுகங்களான பாம்பன், மண்டபம், தொண்டி, சோழியகுடி உள்ளிட்ட இடங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், இந்தப் பகுதியில் உள்ள மீனவர்கள் தங்களது படகுகளை பாம்பன், மண்டபம் உள்ளிட்ட துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
இந்நிலையில், பாம்பன் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், ரயில் பாலத்தில் கடல் அலைகள் ஆக்ரோஷமாக மோதின.
இதனால், பாலத்தில் ரயில்கள் வழக்கத்தைக் காட்டிலும் மிகவும் மெதுவாகச் சென்றன.