24 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 24 பேர் மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 24 பேர் மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ரெ.இளங்கோவன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: கும்பகோணம், புதுக்கோட்டை, பரமக்குடி, மதுரை, தருமபுரி ஆகியவை உள்பட 24 பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் பணிமூப்பு அடிப்படையில் மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com