தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 24 பேர் மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ரெ.இளங்கோவன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: கும்பகோணம், புதுக்கோட்டை, பரமக்குடி, மதுரை, தருமபுரி ஆகியவை உள்பட 24 பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் பணிமூப்பு அடிப்படையில் மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.