பெண் பாலியல் பலாத்காரம்: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு,. 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு,. 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
கந்தர்வகோட்டை அருகேயுள்ள முத்துச்சோழன்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் குமார் (27). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2014-ஆம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணைத் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்தாராம். இதுதொடர்பான புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டு, குமார் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி லியாகத் அலி, குற்றம்சாட்டப்பட்ட குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். இதையடுத்து, போலீஸார் அவரை புதுகை மாவட்டச் சிறைக்குக் கொண்டு சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com