மதுவிலக்கு: அமைச்சருடன் எம்எல்ஏ விவாதம்

மதுவிலக்கு விவகாரம் தொடர்பாக, அமைச்சர் பி.தங்கமணிக்கும் காங்கிரஸ் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

மதுவிலக்கு விவகாரம் தொடர்பாக, அமைச்சர் பி.தங்கமணிக்கும் காங்கிரஸ் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் கே.ஆர்.ராமசாமி பேசியது: பூரண மதுவிலக்கு எப்போது அமல்படுத்தப்படும் என்றார்.
அப்போது அமைச்சர் தங்கமணி குறுக்கிட்டுக் கூறியது:- மதுவிலக்கு கொள்கையில் அரசு தெளிவாகத்தான் உள்ளது. முதலில் 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. 5 ஆண்டுகளுக்குள் படிப்படியாக பூரண மதுவிலக்கு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியிலும் மதுவிலக்கை அமல்படுத்தக் கூறினால், நன்றாக இருக்கும் என்றார்.
கே.ஆர்.ராமசாமி: தமிழக சட்டப்பேரவை உறுப்பினர், தமிழகத்தில் கேட்கத்தான் உரிமை உண்டு.
தங்கமணி: புதுச்சேரியிலும், கர்நாடகத்திலும் காங்கிரஸ் அரசுதான் உள்ளது.
அங்கேயும் மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்துங்கள். தமிழக அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com