விவசாயிகளின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம்

தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு உரிய வகையில் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
விவசாயிகளின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம்

தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு உரிய வகையில் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி, திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
அதற்கு பதிலளித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியது: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை புதன்கிழமை (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதில், விவசாயிகளுக்குப் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும் என தகவல் வருகிறது. அதை பார்த்து, தமிழக அரசும் நடவடிக்கை மேற்கொள்ளும். விவசாயப் பாதிப்பு, பிற காரணங்களால் மரணமடைந்த விவசாயிகளின் குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com