காலமானார் முன்னாள் எம்எல்ஏ சா. மெய்யப்பன்

மூதறிஞர் ராஜாஜியின் சுதந்திரா கட்சியில் காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றியவரும், மூத்த வழக்குரைஞருமான சா. மெய்யப்பன் (92) புதுக்கோட்டையில் அவரது இல்லத்தில் பிப்ரவரி 1-ம் தேதி காலமானார்.
காலமானார் முன்னாள் எம்எல்ஏ சா. மெய்யப்பன்

மூதறிஞர் ராஜாஜியின் சுதந்திரா கட்சியில் காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றியவரும், மூத்த வழக்குரைஞருமான சா. மெய்யப்பன் (92) புதுக்கோட்டையில் அவரது இல்லத்தில் பிப்ரவரி 1-ம் தேதி காலமானார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கண்டனூர்-புதுவயல் கிராமத்தில் கடந்த 1925-ல் பிறந்த இவர், 1967-71 வரை சுதந்திரா கட்சியின் சார்பில் காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகப் பணியாற்றினார்.
1974-ல் அரசு வழக்குரைஞராக நியமனம் செய்யப்பட்ட மெய்யப்பன், காரைக்குடியிலிருந்து புதுக்கோட்டைக்கு இடம்பெயர்ந்து இங்கேயே தனது இறுதிகாலம் வரை வழக்குரைஞராகப் பணியாற்றினார். தினமணியின் தீவிர வாசகரான இவருக்கு வழக்குரைஞர் மெ. வீரப்பன் உள்பட 4 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர்.
இவரது இறுதிச் சடங்குகள் புதுகை டவுன் கிழக்கு மூன்றாம் வீதியிலுள்ள இவரது இல்லத்தில் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது. தொடர்புக்கு: 98424 17089.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com