செம்மரம் வெட்ட சென்றதாகக் கூறி வேலூரில் 12 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மாதனூர் பேருந்துநிலையத்தில் 12 பேரை ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட சென்றதாகக் கூறி தமிழக போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 12 பேரும் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்துக்கது.