சொத்துக் குவிப்பு வழக்கு: துரைமுருகன் விடுவிப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி இருவரையும் வேலூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுவித்தது.
சொத்துக் குவிப்பு வழக்கு: துரைமுருகன் விடுவிப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி இருவரையும் வேலூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுவித்தது.
திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோர் மீது வருமானத்துக்கு பொருந்தாத வகையில் அதிக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் வேலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 2001-ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தனர்.
நீதிபதி தட்சிணாமூர்த்தி முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் இருதரப்பு வழக்குரைஞர்கள் தங்களது வாதத்தை முன்வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து இநத் வழக்கிலிருந்து துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோரை செவ்வாய்க்கிழமை விடுவித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com