சென்னையில் நடந்த வன்முறை தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 23ம் தேதி ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாக கூறி சென்னையில் 312 பேரும், பிற மாவட்டங்களில் 175 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில், சென்னையில் கைது செய்யப்பட்டவர்களில் 21 பேரும், இதர மாவட்டங்களில் 15 பேரும் மாணவர்கள் என்பதால் அவர்களை உடனடியாக விடுவிக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் அண்மையில் தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னையில் நடந்த வன்முறை தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கருணாகரன், செல்வகுமார், ராஜ்குமார், ஜெய்சந்தர் ஆகியோரை இன்று கைது செய்தது போலீஸ்.